கரூரில் ஹூண்டாய் மோட்டார்ஸின் 300வது டீலர் தொடக்கம்
Subscribe to Oneindia Tamil
கரூர்: ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் தனது 300வது டீலரை கரூரில் தொடங்கியுள்ளது.
ஹூண்டாய் நிறுவனம் தனது பணிகளை விரிவுபடுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்தியாவில் தனது 300வது டீலரை தொடங்கியுள்ளது. கரூரில் இந்த டீலர் தொடங்கப்பட்டுள்ளது.
1998ம் ஆண்டு இந்தியாவில் தனது சேவையை 59 டீலர்களுடன் தொடங்கியது ஹூண்டாய். 2010 இறுதிக்குள் 320 டீலர்களைக் கொண்டதாக தனது நிறுவனத்தை அது விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது.
தற்போது 300 டீலர்கள் தவிர 112 விற்பனை நிலையங்களையும், 130 ஹூண்டாய் அட்வான்டேஜ் டீலர்களையும் கொண்டுள்ளது இந்தநிறுவனம்.
இதன் மூலம் மொத்தமாக 290 நகரங்களில் 542 விற்பனை மையங்களைக் கொண்டுள்ளது ஹூண்டாய்.












Click it and Unblock the Notifications