தாயை விரட்டிய மகள்: சேர்ந்து வாழச் சொன்ன நீதிமன்றம்
சென்னை: தள்ளாத வயதில் தாயை வீட்டை விட்டு விரட்டிய மகளையும், மருமகனையும் அந்த மூதாட்டியை நன்றாக பார்த்துக் கொள்ளும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாகரீக மோகம் பிடித்து பெற்றவர்களை வயதான காலத்தில் வீட்டை விட்டு துரத்தியடிப்பது சென்னையில் அதிகம் நடநது வருகிறது.
சென்னையில் உள்ள உள்ளகரத்தைச் சேர்ந்தவர் சுந்தரி (70). அவர் தனது சொந்த வீட்டில் வசித்து வந்தார். அவரின் கணவர் இறந்தபோது, துக்க செயதி கேட்டு வந்த சுந்தரியின் மகளும், மருமகனும் அங்கேயே நிரந்தரமாக தங்கிவிட்டனர்.
நிலத்தாசை கொண்ட அவர்கள் மூதாட்டியை வீட்டை விட்டு வெளியேற்றி ஒரு விடுதியில் சேர்த்தனர். அவர்கள் விடுதிக் கட்டணமும் சரிவர செலுத்தவில்லை. இதனால் மனவேதனை அடைந்த சுந்தரி தன்னை மறுபடியும் தனது சொந்த வீட்டில் குடியமர்த்தும்படி சமூக நலத்துறை அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்தார்.
அதன் பிறகு சுந்தரியின் மகள், மருமகன் மீது சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ஸ்ரீவத்சன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த அவர் சுந்தரியை அவரது சொந்த வீட்டில் வசிக்க அனுமதிக்க வேண்டும். அவர் விருப்பத்திற்கு மாறாக அவரை வெளியேற்றக் கூடாது. மேலும், அவருடைய மகளும், மருமகனும் அவரை நல்லபடியாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications