கேரள உள்ளாட்சித் தேர்தல்-காங். அமோக வெற்றி-இடதுசாரிகள் படு தோல்வி
திருவனந்தபுரம்: கேரளாவில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. கம்யூனிஸ்ட் கூட்டணிக்கு படுதோல்வி கிடைத்தது.
கேரள மாநிலத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த 23 மற்றும் 25 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடந்தது. 21 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உள்ளாட்சி பதவிகளுக்கு பிரதிநிதிகளை தேர்வு செய்ய இந்த தேர்தல் நடத்தப்பட்டது.
உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும் நேரடி போட்டி நிலவியது.
கேரள வரலாற்றில் முதன் முதலாக இந்த தடவை உள்ளாட்சித் தேர்தலில் 50 சதவீத இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. இதனால் உள்ளாட்சி அமைப்புகளில் பாதிக்கு பாதி பதவிகளில் பெண்கள் அமரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இன்று காலை மாநிலம் முழுவதும் உள்ளாட்சித் தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நடந்தது. 10 மணிக்கெல்லாம் முடிவுகள் வெளிவரத் தொடங்கின.
கேரளாவில் 33 நகரசபைகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான நகரசபைகளை காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றியுள்ளது. அதிலும் குறிப்பாக மலப்புரம், கோட்டயம் நகரசபைகளில் காங்கிரஸ் பெருவாரியான இடங்களைப் பிடித்து இடதுசாரிகளுக்கு ஆப்பு வைத்தது.
கொச்சி, திருச்சூர் மாநகராட்சிகள் முடிவுகள் முதலில் அறிவிக்கப்பட்டன. இரண்டு மாநகராட்சிகளையும் காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றியது. கொச்சி மாநகராட்சியை கடந்த 30 ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
திருச்சூர் மாநகராட்சியில் மொத்தம் உள்ள 55 வார்டுகளில் 45 வார்டுகள் காங்கிரஸ் வசமாகி உள்ளது. 2 இடங்களில் பா.ஜ.க.வும், 2 இடங்களில் சுயேட்சைகளும் வென்றுள்ளனர். படுதோல்வியை தழுவிய கம்யூனிஸ்டுகளுக்கு ஒரே ஒரு இடம்தான் கிடைத்தது.
கேரளாவில் வயநாடு பகுதியில் சமுதாய ஜனதா தளம் கட்சி நல்ல செல்வாக்குடன் உள்ளது. அந்த கட்சி சமீபத்தில் கம்யூனிஸ்டு கூட்டணியில் இருந்து விலகி காங்கிரஸ் கூட்டணியில் சேர்ந்தது. இதனால் வயநாடு பகுதியில் உள்ள கல்பேட்டா நகரசபையை அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் பிடித்துள்ளது.
பாஜக பரவாயில்லை
பாரதீய ஜனதா கட்சிக்கும், கேரள உள்ளாட்சித் தேர்தலில் கணிசமான இடங்கள் கிடைத்துள்ளது. குறிப்பாக கேரளாவின் வடக்கு பகுதியில் பாரதீய ஜனதா கூடுதல் இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காசர்கோடு நகரசபையில் பா.ஜ.க. ஆதரவு இல்லாமல் யாரும் ஆட்சியில் அமர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் இன்னும் 6 மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் கம்யூனிஸ்ட் கூட்டணிக்கு கிடைத்துள்ள பெரும் தோல்வி பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications