கேரளாவில் சுயேச்சை எம்.எல்.ஏ. ராஜினாமா: முஸ்லீம் லீக் வலை
திருவனந்தபுரம்: கேரளாவில் சுயேச்சை எம்.எல்.ஏ. மஞ்ஞாலம்குழி அலி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இவர் இதுவரை இடதுசாரிக் கூட்டணிக்கு ஆதரவாக இருந்து வந்தவர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது ராஜினாமா கடிதத்தை பேரவைத் தலைவரின் தனிச் செயலாளரிடம் அலியின் உதவியாளர் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று வழங்கினார்.
மலப்புரம் மாவட்டம் மன்காடா தொகுதியில் இருந்து சுயேச்சை எம்.எல்.ஏ. மஞ்ஞாலம்குழி அலி சட்டப் பேரவைக்கு இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆதரவுடன் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.
அவர் மலப்புரம் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராகச் செயல்பட்டு வருவதாக புகார் எழுந்தது. இதனையடுத்து அவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பற்றி அவதூறுக் கருத்துக்களை வெளியிட்டார். இந்த நிலையில் அவர் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளார்.
ராஜினாமாவை அடுத்து, அவருக்கு முஸ்லிம் லீக் கட்சியினர் வலை விரித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications