சட்டசபை தேர்தல்: முன் கூட்டியே பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தமிழக சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளதால், பிளஸ்-2, பத்தாம் வகுப்புத் தேர்வுகளை முன் கூட்டியே நடத்தி முடிக்க அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்த கல்வியாண்டுக்கன 10ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 பொதுத் தேர்வுகள் தொடர்பான பணிகளை தமிழக அரசு தேர்வுத்துறை தொடங்கியுள்ளது. ஒவ்வொரு பள்ளியிலும் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கையை தயாரித்து வழங்குமாறு உத்தரவிட்டுள்ளது. டிசம்பர் மாதத்தில் பிளஸ்-2, பத்தாம் வகுப்பு தேர்வுக்கான உத்தேச அட்டவணை வெளியிடப்படும்.

தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் இறுதியில் அல்லது மே மாதம் முதல் வாரத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் தேர்தலுக்கு முன்னதாகவே பத்தாம் வகுப்பு, பிளஸ்-2 தேர்வுகளை நடத்தி முடிக்க அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

பிளஸ்-2 தேர்வுகளை பிப்ரவரி 20ம் தேதி தொடங்கி மார்ச் 10ம் தேதிக்குள் முடிக்கவும், பத்தாம் வகுப்பு தேர்வுகளை மார்ச் 12ம் தேதி தொடங்கி 25ம் தேதிக்குள் முடிவுக்கவும் அரசு முடிவு செய்யலாம் என்று தெரிகிறது.

கடந்த சட்டசபைச் தேர்தலின்போது இந்தத் தேர்வுகள் பிப்ரவரி மாதம் தேர்வு தொடங்கி மார்ச் இறுதியில் அனைத்து தேர்வுகளும் நடத்தி முடிக்கப்பட்டன. அதே நடைமுறை இந்த முறையும் பின்பற்றப்படலாம் என்று தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+