எம்பிஏ படித்த தமிழக அரசு ஊழியர்களுக்கு ஊக்க ஊதியம் ரத்து
சென்னை: எம்.பி.ஏ. பட்டம் பெற்ற அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊக்க ஊதியத்தை தமிழக அரசு திடீரென ரத்து செய்துள்ளது.
எம்.பி.ஏ. உள்ளிட்ட நிர்வாக மேலாண்மை படிப்பை முடித்து அரசுத் துறைகளில் பணியாற்றுவோருக்கு ஊக்க ஊதியமாக ரூ. 500 முதல் ரூ.1,000 வரை வழங்கப்பட்டு வந்தது.
இந் நிலையில் இந்த ஊக்க ஊதியத்தை ரத்து செய்து பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, அந்தத் துறையின் பயிற்சிப் பிரிவு முதன்மைச் செயலாளர் கண்ணன் வெளியிட்டுள்ள உத்தரவில்,
மேலாண்மை அறிவுத் திறன் என்பது ஒரு சில குறிப்பிட்ட துறைகளுக்கு உதவி செய்கிறது. அரசுத் துறைகளில் சர்க்கரைத் துறை, டாஸ்மாக், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் ஆகியவற்றில் மட்டுமே மேலாண்மைப் படிப்பு பயனுள்ளதாக உள்ளது.
பிற துறைகளில் பெரிய அளவுக்கு பயனில்லை. எனவே, ஊக்க ஊதியம் தொடர்பாக வெளியிடப்பட்ட அரசு உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications