For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கமுதி அருகே இரு பிரிவினருக்கிடையே மோதல்-போலீஸ்காரர் காயம்-பதட்டம்

Google Oneindia Tamil News

கமுதி: பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் குருபூஜை தொடங்கியுள்ள நிலையில் கமுதி அருகே இரு பிரிவினருக்கிடையே திடீர் மோதல் மூண்டது. இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது. போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில், தேவர் குருபூஜை நிகழ்ச்சிகள் நேற்று தொடங்கின. நாளை குருபூஜை சிறப்பாக நடைபெறவுள்ளது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் விரிவாக செய்யப்பட்டுள்ளன.

இந்தநிலையில் பசும்பொன அருகே உள்ள வெள்ளையாபுரம், சிங்கபுலிப்பட்டி ஆகிய கிராமங்களில் இரு பிரிவினருக்கு இடையே திடீர் மோதல் மூண்டது. இரு பிரிவினரும் கற்களை வீசித் தாக்கிக் கொண்டனர்.

இதையடுத்து அங்கு போலீஸார் விரைந்து வந்தனர். அவர்கள் மீதும் கல்வீச்சு நடந்தது. இதில் ஒரு போலீஸ்காரர் காயமடைந்தார். இதையடுத்து கூடுதல் போலீஸார் வரவழைக்கப்பட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்னர். பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன. பதட்டம் நிலவுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X