ஆந்திர தினக் கொண்டாட்டத்தில் வன்முறை-ரோசய்யா கார் மீது தெலுங்கானா மாணவர்கள் தாக்குதல்
ஹைதராபாத்: ஆந்திர மாநிலம் உருவாக்கப்பட்ட தினம் இன்று ஆந்திரா முழுவதும் கொண்டாடப்பட்டது. ஆனால் தெலுங்கானா பகுதியில் இதை எதிர்த்து நடந்த போராட்டங்களால் வன்முறை வெடித்தது.
ஹைதராபாத்தில், உள்துறை அமைச்சர் கீதா ரெட்டியின் வீட்டை தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியினர் தாக்கினர். கற்கள் வீசப்பட்டன.
அதேபோல முதல்வர் ரோசய்யா வீட்டுக்குள் நேற்று புகுந்து தாக்குதல் நடத்த தெலுங்கானா போராட்டக்காரர்கள் முயன்றனர். இன்று அவரது கார் அணிவகுப்பில் தாக்குதல் நடத்தப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நேற்று ஹைதராபாத் தரம் கரம் சாலையில் உள்ள முதல்வரின் வீட்டை நோக்கி மாணவர்கள் ஊர்வலமாக சென்றனர். போலீஸ் தடுப்புகளை மீறி உள்ளே புக முயன்றனர்.
இதையடுத்து போலீஸார் அவர்களை தடுத்து தடியடிநடத்திக் கலைத்தனர். 15 பேர் கைது செய்யபப்பட்டனர்.
அதேபோல அமைச்சர்கள் குடியிருக்கும் குடியிருப்புகளுக்குள்ளும் போராட்டக்காரர்கள் புக முயன்றதால் பரபரப்பு அதிகரித்தது. இருப்பினும் அனைவரும் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
இன்றைய தினத்தை தெலுங்கானா பகுதியில் துரோக தினமாக தெலுங்கானா போராட்டக்காரர்கள் அனுசரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications