For Daily Alerts
Just In
பள்ளி மாணவர்கள் சவுகரியமாக சென்று வர சிறப்புப் பேருந்துகள்-முதல்வர் உத்தரவு
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
சென்னையில் பள்ளி மாணவர்கள் பள்ளிக்குச் செல்லும்பொழுதும், வீடு திரும்பும்பொழுதும் பேருந்துகளில் ஏற்படும் நெரிசல் காரணமாக பயணம் செய்வதில் சிரமம் ஏற்படுகிறது.
இதைத் தவிர்க்கும் நோக்குடன் மாணவ, மாணவியர் பள்ளிகளுக்குச் சென்று வருவதற்கு வசதியாக, 23சி, 29ஏ, 11ஜி, 12பி, 21எல், 27டி, 29சி, 47, 5பி, 6டி, 37பி, 38சி ஆகிய 12 வழித்தடங்களில் காலையில் இரண்டு முறையும், மாலையில் இரண்டு முறையும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான சிறப்புப் பேருந்துகளை உடனடியாக இயக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Story first published: Monday, November 1, 2010, 14:12 [IST]