6400 தனியார் பள்ளிகளுக்கு விரைவில் கட்டண நிர்ணயம்-நீதிபதி ரவிராஜ பாண்டியன்
இப்பதவியில் இருந்து வந்த நீதிபதி கோவிந்தராஜன் பதவி விலகியதைத் தொடர்ந்து ரவிராஜ பாண்டியன் இப்பொறுப்பில் அமர்த்தப்பட்டுள்ளார். இன்று அவர் தனது பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
அப்போது அவரிடம், ஏற்கனவே கமிட்டி நிர்ணயித்த கட்டணத்தை கொண்டு பள்ளியை நடத்த இயலாது எனமேல் முறையீடு செய்தன. 6,400 தனியார் பள்ளிகள் கமிட்டியிடம் முறையீட்டு மனுக்களை அளித்தன. இவற்றை விசாரித்த உயர்நீதிமன்றம், 4 மாதத்திற்குள் இவற்றுக்கான கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளதே என்று கேட்டனர்.
அதற்கு அவர், உயர்நீதிமன்ற உத்தரவின்படி 6,400 பள்ளிகளுக்கும் குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் கட்டணம் நிர்ணயிக்கப்படும். உயர்நீதிமன்ற உத்தரவு கடைபிடிக்கப்படும். அதை பின்பற்றி அதில் கூறப்பட்டுள்ளபடி அந்த காலக்கட்டத்திற்குள் நிர்ணயம் செய்து அறிவிப்போம்.
இதற்காக தனியார் பள்ளிகளுக்கு நேரில் செல்லத் தேவையில்லை. உயர்நீதிமன்றமும் அவ்வாறு கூறவில்லை. பள்ளிகள் வழங்கும் ஆவணங்களை வைத்து அதன் அடிப்படையில் கட்டணம் முடிவு செய்யப்படும்.
கூடுதல் கட்டணம் வசூலித்த பள்ளிகள் மீது நடவடிக்கை வேண்டியது நான் அல்ல கல்வித்துறை அதிகாரிகள்தான் எடுப்பார்கள் என்றார் அவர்.