பத்திரப் பதிவு அலுவலகங்களில் டோக்கன் எண் அறிய சில்வர் லைன் இயந்திரம்

Subscribe to Oneindia Tamil

நெல்லை: தமிழகத்தில் 574 பத்திர பதிவு அலுவலகங்களில் டோக்கன் விபரம் அறிய சில்வர் லைன் இயந்திரம் பயன்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

பத்திர பதிவு நாளில் இருந்து 3 நாட்களுக்கு முன்பதிவு செய்து டோக்கன்களை வேலை நாளில் மாலை 4 மணி முதல் 5.30 மணி வரை பெற்றுக் கொள்ளலாம். இந்த டோக்கனில் உள்ள எண் வரிசைப்படியே பத்திரப் பதிவுக்கு அழைக்கப்படுவர்.

இதுகுறித்து பத்திர பதிவு துறை தலைவர் கூறுகையில், ஆவணத்தை எழுதி பெறுபவர், எழுதி கொடு்ப்பவர் இவர்களில் ஒருவருக்கு மட்டுமே சரியான அடையாள அட்டை பெற்று டோக்கன் வழங்க வேண்டும். எழுத்தர்கள், இடை தரகர்களுக்கு எக்காரணம் கொண்டும் டோக்கன் வழங்க கூடாது.

டோக்கன் விபரம் மக்கள் அமர்ந்துள்ள இடத்திலிருந்தே தெரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பதிவு துறை உயரதிகாரிகள் ஆய்வு செய்யும்போது இந்த நடைமுறைகளை பின்பற்றாத சார்பதிவாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

முன்பு பதிவு செய்பவர்களின் பெயர்களை குறிப்பிட்டு அழைத்து பத்திர பதிவு செய்தனர். இனி டோக்கன் எண்களை சில்வர் லைன் இயந்திரம் மூலம் தெரிவித்து வரிசைப்படி பத்திரபதிவு நடக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+