காவிரியில் மணல் அள்ள தடை-மணல் விலை விலை கிடுகிடு உயர்வு
Subscribe to Oneindia Tamil
திருச்சி: காவிரி ஆற்றில் தொடர்ந்து நீரோட்டம் இருப்பதால் ஆற்றில் இருந்து மணல் அள்ள தடை வதிக்கப்பட்டுள்ளதால் மணல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
காவிரி ஆற்றில் நீரோட்டம் தொடர்ந்து இருப்பதால், காவிரி ஆற்றில் மணல் அள்ளுவது தடைபட்டுள்ளது. ஆனால், பெரும்பாலான குவாரிகளில் மணல் அள்ளுவது, தற்காலிகமாக நிறுத்தப்பட்டதால், மணல் விலை சற்று உயர்ந்துள்ளது.
மூன்று யூனிட் கொண்ட ஒரு லோடு மணல், 3,000 ரூபாய் வரை விற்கப்படுகிறது. திருப்பூர், கோவை போன்ற பகுதிகளில், ரூ 5,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது.
மணலுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளதால் பொது மக்கள் தங்களது கட்டித்தை மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும்,வணிக நிறுவனங்களும், அரசு சார்பிலான பணிகளிலும் மந்த நிலை ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications