Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வேலையில்லாத் திண்டாட்டம்-திருப்பூரில் 2009ல் 980 பேர் தற்கொலை

Subscribe to Oneindia Tamil

Suicide
திருப்பூர்: வேலை இல்லா காரணத்தால் திருப்பூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 980 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இது குறித்து மேற்குமண்டல ஐ.ஜி. சிவனாண்டி கோவையில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

கடந்த 2009 -ம் ஆண்டில் மேற்கு மண்டலத்தில் 550 தற்கொலைகளும், 2010-ல் 430 கொலைகளும் நடந்துள்ளன. இந்தத் தற்கொலைகள் வேலையில்லாத் திண்டாட்டம் காரணமாக நடந்துள்ளன.

பொதுவாக 30 வயது முதல் 40 வயதுக்குட்பட்டவர்களே தற்கொலை செய்து கொள்கின்றனர். இவர்களில் பெண்களைக் காட்டிலும் ஆண்களே அதிகம்.

மேற்கு மண்டலத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும், தற்கொலை தடுப்பு ஆலோசனை மையம் தொடங்கப்பட்டுள்ளது.

15 நாட்களுக்கு ஒரு முறை மாவட்ட எஸ்.பி. அளவிலும். மாதத்திற்கொரு முறை டி.ஐ.ஜி., ஐ.ஜி. ஆகியோர் அளவிலும் பிரச்சனைகளைக் கேட்டு தீர்வுக்காண நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

காவல்துறை ஆய்வாளர், வழக்கறிஞர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஆகியோர் மூலம் விழிப்புணர்வு கூட்டமும் நடத்தப்படும் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+