விபச்சாரம்: கன்னட பிரசாத் கூட்டாளிகள் கைது-3 பெண்கள் மீட்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: காரில் வெளி மாநில பெண்களை வைத்து விபசாரம் நடத்திய கன்னட பிரசாத்தி்ன் கூட்டாளிகள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பிடியிலிருந்த 3 பெண்கள் மீட்கப்பட்டனர்.
சென்னை புறநகர் போலீசார் தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலையில் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது காரில் வெளி மாநில பெண்களை வைத்து விபசாரம் நடத்திய புரோக்கர்கள் குகன் (35), சண்முகம் (28) ஆகியோர் பிடிபட்டனர். இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
காரில் இருந்த ஹைதராபாத்தை சேர்ந்த பூனம் (28), மும்பையைச் சேர்ந்த ரோகித் (22), பெங்களூரைச் சேர்ந்த ரூபா (25) ஆகியோரை போலீசார் மீட்டனர்.
இதில் குகன் பிரபல விபசார புரோக்கர் கன்னட பிரசாத்தின் நெருங்கிய கூட்டாளி ஆவார்.
இவர்களிடமிருந்து மீட்கப்பட்ட பெண்கள் மைலாப்பூர் அரசு பெண்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications