வாஷிங் மெஷினில் போட்டு பச்சிளம் குழந்தையைக் கொன்ற அமெரிக்க தாய் கைது
லண்டன்: அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் பிறந்து 10 நாளே ஆன தனது பெண் குழந்தையை வாஷிங் மெஷினில் போட்டு கொடூரமாக கொலை செய்துள்ளார்.
அமெரிக்காவைச் சேர்நதவர் லின்ட்சே பிட்லர். இவருக்கு 4 மற்றும் 3 வயதில் இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கிறார்கள். இந்நிலையில் இவர் கடந்த 10 நாட்களுக்கு முன் ஒரு பெண் குழந்தையை பெற்று எடுத்தார். அதற்கு மேகி மே என்று பெயரிடப்பட்டது.
அந்த பச்சிளம் குழந்தையை அழுக்குத் துணிகளுடன் சேர்த்து வாஷிங் மெஷினில் போட்டு 40 நிமிஷம் சலவை செய்துள்ளார். இதில் குழந்தை பரிதாபமாக துடிதுடித்து இறந்தது.
வாஷிங் மெஷினில் வித்தியாசமான சத்தம் வருவதைக் கேட்ட மேகியின் அத்தை அதை திறந்து பார்த்தபோது தான் இந்த கொடுமை தெரிய வந்தது.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். வாஷிங் மெஷினில் குழந்தை கொடூரமாகக் கிடந்ததைப் பார்த்து சில காவலர்கள் கண்ணீர் விட்டனர்.
இதையடுத்து போலீசார் லின்ட்சேவை கைது செய்தனர். அவர் வேண்டும் என்றே குழந்தையைக் கொலை செய்தாரா என்று விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications