தங்கம்... சவரன் விலை ரூ 15000 ஐத் தாண்டியது!
பொதுவாக பண்டிகை காலத்தில் தங்கம் விலை உயர்வதும், பின்னர் படிப்படியாக குறைவதும் வழக்கம். ஆனால் தீபாவளி பண்டிகை முடிந்த பின்னரும் விலை குறையவில்லை. மாறாக அதிரடியாக விலை உயர்ந்து வருகிறது.
தீபாவளி பண்டிகை அன்று ஒரு பவுன் தங்கம் ரூ. 14 ஆயிரத்து 624 ஆக இருந்தது. மறுநாள் (சனிக்கிழமை) அதிரடியாக பவுனுக்கு ரூ. 280 அதிகரித்து ரூ. 14 ஆயிரத்து 904 ஆக விற்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று மேலும் ரூ. 48 அதிகரித்து ஒரு பவுன் ரூ. 14 ஆயிரத்து 952 ஆக இருந்தது. எனவே ஓரிரு நாளில் பவுன் ரூ. 15 ஆயிரத்தை தாண்டும் என எதிர்பார்க்கப்பட்டது.
அதன்படியே இன்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ. 208 உயர்ந்து ரூ. 15 ஆயிரத்து 160 ஆக உள்ளது. அதாவது ஒரு பவுன் ரூ. 15 ஆயிரத்தை தாண்டியது. ஒரு கிராம் ரூ. 1895 ஆக விற்கப்படுகிறது. இன்று ஒரு கிலோ வெள்ளி ரூ. 42 ஆயிரத்து 35க்கும், ஒரு கிராம் ரூ. 45க்கும் விற்கப்படுகிறது.
இந்த விலை உயர்வு பொதுமக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.