2 குழந்தைகளின் தாயை கடத்திய தேமுதிக நிர்வாகி : போலீசார் வலைவீச்சு
Subscribe to Oneindia Tamil
கடையநல்லூர்: கடையநல்லூரில் 2 குழந்தைகளின் தாய் மாயமானார். அவரை கடத்தியதாக தேமுதிக பிரமுகர் மீது கணவர் போலீசில் புகார் செய்தார்.
கடையநல்லூர் மாவடிக்கல் பகுதியைச் சேர்ந்தவர் கட்டிடத் தொழிலாளி செல்லத்துரை. இவரது மனைவி சண்முகதாய். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
நேற்று முன்தினம் கடைக்கு சென்ற சண்முகதாய் நீண்ட நேரமாகியும் வீ்டு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால் செல்லத்துரை கடையநல்லூர் போலீசில் புகார் செய்தார்.
அதில் தனது மனைவியை அதே பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவர் கடத்திச் சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சங்கர் நகர தேமுதிக பொறியாளர் அணி தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications