சங்கரன்கோவில் அருகே குடிபோதையில் பெண் எஸ்.ஐ.-யை தாக்கியவர் கைது
Subscribe to Oneindia Tamil
சங்கரன்கோவில்: கோவில் திருவிழாவில் குடிபோதையில் பெண் எஸ்.ஐ-யை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.
சங்கரன்கோவில் அருகே உள்ள தெற்கு பனவடலிசத்திரத்தைச் சேர்ந்தவர் மாடசாமி மகன் குமார். கேரளாவில் கூலி வேலை செய்து வருகிறார். இவர் மீது பனவடலிசத்திரம் போலீசில் பல்வேறு திருட்டு புகார்கள் உள்ளன.
இந்நிலையில் அங்குள்ள அம்மன் கோவிலில் திருவிழா நடந்தது. திருவிழாவுக்கு வந்த குமார் அங்குள்ளவர்களிடம் போதையில் தகராறு செய்து கொண்டிருந்தார். அப்போது பாதுகாப்பில் இருந்த பெண் எஸ்.ஐ. செல்வராணி குமாரை சத்தம் போட்டார்.
இதையடுத்து குமார் செல்வராணியை திடீரென தாக்கிவிட்டு ஓடிவிட்டார். அருகில் இருந்த மற்ற போலீசார் குமாரை விரட்டிப் பிடித்தனர். இது குறித்து இன்ஸ்பெக்டர் தீபு விசாரணை நடத்தி குமாரை கைது செய்தார்.












Click it and Unblock the Notifications