For Daily Alerts
Just In
இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்-சுனாமி எச்சரிக்கை இல்லை
ஜகார்த்தா: இந்தோனேசியாவின் கிழக்கு மலுக்கு தீவில் இன்றுகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இருப்பினும் சுனாமிஎச்சரிக்கை விடப்படவில்லை.
மலுக்கு தீவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் அளவு 6.1 ரிக்டராகஇருந்தது. இருப்பினும் சுனாமி அபாய எச்சரிக்கை விடப்படவில்லை. இந்த பூகம்பத்தால் ஏற்பட்டசேதம் குறித்த விவரம் வெளியாகவில்லை.
சமீபத்தில் இந்தோனேசியாவில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி தாக்கியது நினைவிருக்கலாம்.
Story first published: Friday, November 12, 2010, 11:45 [IST]