ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும்-மணி சங்கர அய்யர்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியம். ஊழல் தொடர்பாக பிரதமருக்கு அனைத்தும் தெரியும். எனவே அவர் சரியான முடிவையே எடுப்பார் என்று மூத்த காங்கிரஸ் தலைவர் மணிசங்கர அய்யர் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர்கூறுகையில்,இதுதான் நடந்தது என்று அறுதியிட்டுக் கூற விரும்பவில்லை. ஆனால் என்ன நடந்தது என்பது பிரதமருக்குத் தெரியும் என்று கருதுகிறேன். அவர் ஒரு நேர்மையான தலைவர். எனவே சரியான முடிவுக்கு அவர் வருவார் எனக் கருதுகிறேன்.

முதலில் பாரபட்சமற்ற விசாரணை நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். அற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். சிஏஜி அறிக்கையை கவனத்தில் கொள்வதும் அவசியம்.

அதேசமயத்தில், டிராய் விதித்துள்ள கட்டுப்பாடுகள், விதிமுறைகள் நிஜமானவை, எழுத்துப்பூர்வமானவை என்பதையும் நாம் கவனத்தில் கொண்டாக வேண்டும். அந்தப் பரிந்துரைகளை அமைச்சர் ராஜாவும் ஏற்றுள்ளார் என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாகும்.

ஆனால் டிராய் ஏன் தவறான பரிந்துரைகளைக் கொடுத்தது என்பதுதான் இங்கு கவனிக்கப்பட வேண்டியதாகும், இந்த அடிப்படைத் தவறை டிராய் ஏன் செய்தது என்பதையும் விசாரித்தாக வேண்டும் என்று கூறியுள்ளார் அய்யர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+