திமுக மாவட்ட செயலாளர் போல செயல்படுகிறார் திருவாரூர் எஸ்.பி.-ஜெ. புகார்

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
மன்னார்குடி நகரம், கோபிரளயம் சாலையில் காளியம்மாள் என்ற பெண்மணி 9.6.2010 அன்று கொலைசெய்யப்பட்டது, திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பாமணி பகுதியில் 1.8.2010 அன்று 5 வயது சிறுமி மண்எண்ணை ஊற்றி கொளுத்தப்பட்டது, நீடாமங்கலம், கோவில் வெண்ணி அம்பேத்கர் நகரில் கோவிந்தம்மாள் என்கிற மூதாட்டி கொலை செய்யப்பட்டது உள்பட பல வழக்குகளில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாத சூழ்நிலை நிலவுகிறது.
இதே போன்று, மன்னார்குடி நகரத்தில் ஓய்வு பெற்ற தாசில்தார் வீட்டில் 25.6.2010 அன்று நடைபெற்ற கொள்ளை, துணிக்கடை அதிபர் வீட்டில் நடைபெற்ற கொள்ளை, திருவாரூர் நகரத்தில் வேளாண் துறை தோட்டக்கலை உதவி இயக்குநர் வீட்டில் 15.5.2010 அன்று நடைபெற்ற கொள்ளை, 20.7.2010 அன்று நூருல்அமீன் என்பவரிடம் அடிக்கப்பட்ட கொள்ளை, 19.2.2010 அன்று ரவிச்சந்திரன் என்பவரிடம் அடிக்கப்பட்ட கொள்ளை, 7.8.2010 அன்று நன்னிலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட சேந்தமங்கலம் பகுதியில் ஜெயந்தி என்பவருடைய செயின் அறுப்பு, மூங்கில்குடி முத்து அனிதாவின் செயின் அறுப்பு என பல கொள்ளை மற்றும் வழிப்பறி வழக்குகளிலும் குற்றவாளிகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
மாறாக, திருவாரூர் மாவட்டத்தைச்சேர்ந்த கழக நிர்வாகிகள் மீது பொய் வழக்குகளை போடுவது, போன்ற வேலைகளில் திருவாரூர் மாவட்டக் காவல் துறை ஈடுபட்டு வருவதாகவும், காரைக்காலில் இருந்து திருவாரூக்கு கள்ளச்சாராயம் கடத்துவதற்கு உறுதுணையாக காவல் துறை இருப்பதாகவும், திருவாரூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் தி.மு.க. மாவட்டச் செயலாளரைப் போல் செயல்படுவதாகவும் தகவல்கள் வருகின்றன.
இதை கண்டித்து திருவாரூர் மாவட்டக்கழகத்தின் சார்பில், 15 ந் தேதி (திங்கட்கிழமை) அன்று காலை 10 மணி அளவில், மன்னார்குடி நகரம், மேல ராஜ வீதி, பெரியார் சிலை அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டம், கழக வக்கீல்கள் பிரிவுச் செயலாளர் பி.எச். மனோஜ் பாண்டியன், எம்.பி., தலைமையிலும், திருவாரூர் மாவட்டக் கழகச்செயலாளர் காமராஜ் முன்னிலையிலும் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications