சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்களுக்கு பதவி உயர்வு : அமைச்சர் கீதா ஜீவன்
நெல்லை: சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்களை அரசு துறைகளில் பணியமர்த்த சீனியாரிட்டி பட்டியல் தயார் செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.
நெல்லையில் நடந்த சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் ஒன்றிய மாநாட்டில் சமூக நலம் மற்றும் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு பேசுகையில், "எதிர்கால சந்ததிகளை பராமரிக்கும் பணியை அங்கன்வாடி, சத்துணவு பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். அவர்களது சிரமங்களை உணர்ந்து பல்வேறு கோரிக்கைகளை முதலமைச்சர் கருணாநிதி படிப்படியாக நிறைவேற்றி வருகிறார்.
கடந்த அதிமுக ஆட்சியில் சத்துணவு துறைக்கு ரூ.227 கோடி நிதி ஒதுதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் திமுக ஆட்சியில் ரூ.1238 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சமூக நலத்துறைக்கு கடந்த 2005-06 ஆண்டில் ஒதுக்கப்பட்ட நிதியை விட 4 மடங்கு அதிகமாக 2010-2011ல் ரூ.2754 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
சத்துணவு பணியாளர்களுக்கு பதவி உயர்வு அளிக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். சமூக நலத்துறை உள்பட 4 துறைகளில் பதிவுத்துறை எழுத்தர், உதவியாளர்கள், கண்காணிப்பாளர் நிலை 2 பதவிகளில் தகுதியுள்ளவர்களை பணியமர்த்த சீனியாரிட்டி பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது. இதற்கான உத்தரவு இன்னும் 15 முதல் 20 நாட்களுக்குள் வழங்கப்படும்.
இதே போன்று பி.எட். படித்துவிட்டு சத்துணவு, அங்கான்வாடி துறைகளில் பணிபுரிபவர்களுக்கு ஆசிரியர் பணி வழங்கும் பொருட்டு இம்மாத இறுதியில் சிறப்பு தேர்வு நடத்தப்படுகிறது. இதுவரை சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் தொடர்ச்சியாக விடுமுறை எடுக்க முடியாத நிலை இருந்தது. தற்போது 10 நாட்கள் வரை விடுமுறை எடுக்கலாம் என்ற சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு பொது வருங்கால நிதி திட்டத்தை செயல்படுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது," என்றார்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications