நான் குற்றமற்றவன்... இதை சட்டப்படி நிரூபிப்பேன்! - ராசா

Subscribe to Oneindia Tamil

A Raja
சென்னை: 2ஜி அலைக்கற்றை உரிம விற்பனையில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. நான் குற்றமற்றவன். இதை சட்டப்படி அழுத்தமாக நிரூபிப்பேன், என்றார் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமச்சர் ஆ ராசா.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார் அமைச்சர் ராசா. அவர் கூறுகையில், "2ஜி அலைக்கற்றை உரிமம் வழங்கியதில் ஒளிவு மறைவு இல்லாமல் செயல்பட்டேன். ஊடகங்கள் உள்நோக்கத்தோடு தேவையற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறது. 2ஜி அலைக்கற்றை உரிமம் தொடர்பான அனைத்து ஆலோசனை கூட்டங்களிலும், தொலைத் தொடர்பு துறை முன்னாள் செயலாளர் மாத்தூர் கலந்துகொண்டு கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளார்.

25.09.2007ல் பரிந்துரைக்கப்பட்டபடி விண்ணப்பதாரர்களுக்கு அலைக்கற்றை உரிமை செய்து 7.11.2007ல் முடிவு செய்யப்பட்டது. அனைத்து ஆலோசனைக் கூட்டங்களிலும் மாத்தூர் கலந்து கொண்டார். இதை எனது துறை அதிகாரிகள் என்னிடம் தெரிவித்துள்ளனர். அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக அனைத்துக் கோப்புகளிலும் மாத்தூர் கையெழுத்திட்டுள்ளார்.

நான் குற்றமற்றவன். எதற்காக பதவி விலக வேண்டும். நான் தவறு செய்யவில்லை என்பதை சட்டப்படி அழுத்தமாக நிரூபிப்பேன். சிபிஐ விசாரணையில் எனது பெயர் இடம் பெறவில்லை," என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+