குடியேற்ற விதிகளை மீறிய 6 இந்தியர்கள் இங்கிலாந்தில் கைது!
லண்டன்: இங்கிலாந்தில் குடியேற்ற விதிகளை மீறி தங்கியிருந்த 6 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை நாடு கடத்தப்போவதாக பிரிட்டிஷ் அரசு அறிவித்துள்ளது.
இங்கிலாந்து குடியேற்ற விதிகளை மீறி சிலர் வாழ்ந்து வருவதாக இங்கிலாந்து எல்லை ஏஜென்சிக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் சவுதால் ஹேஸ் ரோட்டில் உள்ள 2 மொத்த வியாபாரக் கடைகளில் கடந்த விழக்கிழமை சோதனை நடத்தினர்.
இதில் 5 இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் 24 முதல் 33 வயதுள்ளவர்கள். இவர்களில் இருவர் சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் வந்தவர்கள், மூவர் விசா முடிந்தும் நாடு திரும்பாதவர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஏ1 வெஜ் லிட் -ல் 26 வயதுடையவர் கைது செய்யப்பட்டார். கைதானவர்களின் முதலாளிகள் முறையாக சோதனை செய்யாமலிருக்கும்பட்சத்தில் அவரகள் ஒவ்வொரு பணியாளுக்கும் ரூ. 719,172 அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். இவர்கள் 6 பேரையும் நாட்டை விட்டு வெளியேற்ற அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications