Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரசியல் சட்டத்தையே கேலிக்கூத்தாக்கிய ராஜாவைக் கைது செய்ய வேண்டும்-ஜெ.

Subscribe to Oneindia Tamil

Jayalalitha
சென்னை: அரசியல் சட்டத்தை கேலிக்கூத்தாக்கியதோடு, பிரதமர் அலுவலகம், சிஏஜி, டெல்லி உயர்நீதிமன்றம், சுப்ரீம் கோர்ட் என அனைத்தையும் கேலிக்கூத்தாக்கிய ராஜாவை உடனடியாக ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராஜாவின் ராஜினாமா வரவேற்புக்குரியது. இது நீண்டகாலமாக கோரப்பட்டு வந்த கோரிக்கையாகும்.

ஆனால் பிரதமர் வலியுறுத்தியதால்தான் ராஜினாமா செய்தார் ராஜா என்றும், கருணாநிதி உத்தரவிட்டதால்தான் ராஜினாமா செய்தார் என்றும் முரண்பட்ட தகவல்கள் வருவது வருத்தம் தருகிறது.

மேலும், ஊழலுக்குப் பொறுப்பேற்காமல், நாடாளுமன்றம் ஸ்தம்பிக்கிறது என்பதற்காகவே ராஜினாமா செய்கிறோம் என்று கருணாநிதி கூறியிருப்பது கண்டனத்துக்குரியது.

இத்தனை காலமாக அரசியல் சட்டத்தை கேலிப் பொருளாக்கி விளையாடி வந்தார் ராஜா. மேலும், பிரதமர் அலுவலகம், சிஏஜி, நாடாளுமன்றம், டெல்லி உயர்நீதிமன்றம், சுப்ரீம் கோர்ட் என அனைத்தையும் தவறான பாதையில் திருப்பி விட்டிருந்தார்.

எனவே உடனடியாக அவரை ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து உரிய முறையில் விசாரித்து தண்டிக்க வேண்டும். அப்போதுதான் மனித குல வரலாற்றில் மிகப் பெரிய ஊழலான ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நீதி கிடைக்கும். இதற்கு கூட்டு நாடாளுமன்ற விசாரணைக்கு உத்தரவிடப்பட வேண்டியதும் அவசியமாகும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+