For Daily Alerts
Just In
புதிய வாக்காளர்களுக்கு ஜனவரி 25ம் தேதி அடையாள அட்டை
சென்னை: வாக்காளர் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்டவர்களுக்கு வரும் ஜனவரி 25ம் தேதி வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்படவுள்ளது.
இது குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தலுக்கான விண்ணப்பங்கள் அளிப்பதற்கான கால அவகாசம் நவம்பர் 11ம் தேதி முடிவடைந்தது.
வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்ப்பதற்காக 12,68,912 விண்ணப்பங்களும், பெயர்களை நீக்குவதற்காக 15,844 விண்ணப்பங்களும், 33,058 விண்ணப்பங்கள் முகவரி மாற்றம் செய்வதற்காகவும் பெறப்பட்டன.
புதிதாக சேர்க்கப்பட்ட வாக்காளர்களுக்கு தேசிய வாக்காளர் தினமான ஜனவரி 25ம் தேதி அட்டை வழங்கப்படும். நிர்ணயிக்கப்பட்ட இடங்களில் இவற்றை பெற்றுக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.
Story first published: Tuesday, November 16, 2010, 16:13 [IST]