மேலும் 4 கன்னியாகுமரி மீனவர்கள் கத்தார் நாட்டில் சிறைபிடிப்பு
நாகர்கோவில்: கத்தாரில் மேலும் 4 குமரி மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டனர்.
குமரி மாவட்டம் குரும்பனையை சேர்ந்த மில்லர், ஜான் பிரிட்டோ, கடியப்பட்டணத்தை சேர்ந்த பீட்டர் ரோம்ராஜ், இனயத்தை சேர்ந்த சகாயராஜ் ஆகியோர் பாக்ரைன் நாட்டில் தங்கி மீன்பிடி தொழில் செய்து வந்தனர்.
பக்ரைனை சேர்ந்த பாக்கர் என்பவர் தனது படகில் இந்த மீனவர்களை வேலைக்கு அமர்த்தியிருந்தார். பக்ரைன் நாட்டில் சித்திரா என்ற துறைமுகத்தில் இருந்து 4 மீனவர்களும் மீ்ன்பிடிக்க சென்றபோது கத்தார் கடல் காவல்படையால் கைது செய்யப்பட்டனர்.
பக்ரைன் கடல் எல்லைக்குள் இருக்கும்போதே கத்தார் கடல் காவல்படையினர் தங்களை கைது செய்துள்ளனர் என்று தெரிவித்துள்ளனர்.
சிறையில் அடைக்கப்பட்ட மீனவர்களின் உறவினர்கள் தெற்கு ஆசிய மீனவர் தோழமை அமைப்பின் பொது செயலாளர் சர்ச்சில், தலைவர ரீ்மாரோஸ், ஆகியோர் தலைமையில் நேற்று கலெக்டர் அலுவலகம் வந்தனர். அப்போது தூக்கம் தளாமல் அவர்கள் கலெக்டர் அலுவலக வாளகத்தில் அழுது புரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் கலெக்டர் அலுவலக அதிகாரிகளை சந்தித்து மீனவர்களை மீட்க கோரி மனு கொடுத்தனர்.












Click it and Unblock the Notifications