போலீஸ் வலையில் போலி துணைவேந்தர்: ரூ. 2.4 லட்சம் மோசடி
கொச்சி: பல்கலைக்கழகத் துணை வேந்தர் என்று கூறி ரூ. 2.4 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
கேரளாவைச் சேர்ந்தவர் பி. வி. சுதீப் (37). இவர் 10-ம் வகுப்பு வரை தான் படித்திருக்கிறார். ஆனால் அவர் தான் ஒரு பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக இருப்பதாகக் கூறி வந்துள்ளார். இவர் பலரிடம் பல்வேறு பல்கலைக்கழகங்களில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் வாங்கி ஏமாற்றியுள்ளார்.
இந்நிலையில் அவர் ஒரு பெண்ணிடம் தன்னை மணம் செய்து கொள்ளும்படி கேட்டுள்ளார். அதற்கு அந்தப் பெண் மறுக்கவே தன்னை காலடியில் உள்ள சமஸ்கிருத பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் என்று அறிமுகப்படுத்தியுள்ளார். மேலும், அவருக்கு பல்கலைக்கழகத்தில் நல்ல வேலை வாங்கித் தருவதாகவும் கூறியுள்ளார்.
இதை நம்பிய அந்த பெண்ணின் தந்தை சுதீபிடம் ரூ. 2. 4 லட்சம் கொடுத்துள்ளார். பணத்தைப் பெற்றுக் கொண்ட பிறகு அவர் தலைமறைவானார். இதையடுத்து போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.
இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சுதீபை கைது செய்தனர். அவரிடம் இருந்து பல போலிச் சான்றிதழ்களும், பல பிரபலமானவர்கள் அளித்த கடிதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.












Click it and Unblock the Notifications