மகாராஷ்டிர அமைச்சரவையில் குழப்பம்-பதவியேற்பு ஒத்திவைப்பு
மும்பை: பிருத்விராஜ் சவான் தலைமையிலான மகாராஷ்டிர அமைச்சரவை பதவியேற்பில் குழப்பம் ஏற்பட்டுள்ளதால் அது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஆதர்ஷ் வீட்டு வசதிக் கழக ஊழலில் சிக்கியதால் முதல்வராக இருந்த அசோக் சவான் ராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய முதல்வராக பிருத்விராஜ் சவானும், புதிய துணை முதல்வராக அஜீத் பவாரும் பதவியேற்றனர்.
இதையடுத்து அமைச்சர்கள் தேர்வு நடந்து வந்தது. இதுதொடர்பாக காங்கிரஸுக்கும், தேசியவாத காங்கிரஸுக்கும் இடையே ஆலோசனை நடந்து வந்தது. இதையடுத்து இன்று புதிய அமைச்சர்கள் பதவியேற்பார்கள் எனக் கூறப்பட்டிருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் அது ஒத்திவைக்கப்பட்டு விட்டது.
இன்று அமைச்சரவை பதவியேற்பு இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் பெயரை இறுதி செய்வது தொடர்பாக மேலிடத்துடன் ஆலோசிக்க பிருத்விராஜ்சவான் டெல்லி சென்றுள்ளார். சில அமைச்சர்கள் சேர்ப்பு தொடர்பாக இழுபறி ஏற்பட்டுள்ளதாக தேசியவாத காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications