For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இலங்கைக்கு படகில் செல்ல முயன்ற 3 அகதிகள் கைது

By Chakra
Google Oneindia Tamil News

ராமேஸ்வரம்: படகு மூலம் இலங்கைக்கு தப்பிச் செல்ல முயன்ற 3 இலங்கை அகதிகளை போலீசார் கைது செய்தனர்.

இலங்கை அகதிகளான தனுஷன்(26), பிரபாகரன் (25) மற்றும் கமல் (35) ஆகியோர் சென்னையில் வசித்து வந்தனர். அவர்கள் தங்களை அகதிகளாக பதிவு செய்யவில்லை. இந்நிலையில் மூவரும் சொந்த நாடான இலங்கைக்குத் திரும்பிச் செல்ல முடிவு செய்தனர்.

அதற்காக பேரையூரைச் சேர்ந்த ராஜா என்பவரிடம் தோணி கேட்டு ரூ. 35,000 கொடுத்தனர். சங்குமால் கடற்கரையில் தமிழக மீனவர்கள் படகை எடுத்துக் கொண்டு கடலுக்குச் செல்ல முயன்றபோது அவர்களை க்யூ பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர்கள் பாஸ்போர்ட் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X