ராஜா அனுமதி கொடுத்த பணி நியமனங்கள் நிறுத்திவைப்பு
டெல்லி: தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது ராஜா அனுமதி அளித்த பணி நியமன உத்தரவுகளை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.
இந்த முக்கிய பணி நியமனங்கள் குறித்து தற்காலிக தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள கபில் சிபல் ஆராய்ந்து அவற்றை அனுமதிப்பது தொடர்பாக முடிவெடுப்பார் என்றும் தெரிகிறது.
நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நியமனங்களில் முக்கியமானது - பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தலைவர் பதவி, எம்டிஎன்எல் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் பதவி, டிராய் அமைப்பின் உறுப்பினராக தொலைத் தொடர்புத் துறை சார்பில் பரிந்துரைக்கப்படும் நபர் ஆகியோர் ஆகும்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக ராஜா எடுத்த முடிவால் நாட்டுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக கணக்கு தணிக்கை அதிகாரி தாக்கல் செய்த அறிக்கையைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் கடும் நிர்ப்பந்தத்தின் விளைவாக ராஜா தனது பதவியை சமீபத்தில் ராஜினாமா செய்தார் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications