முக்கிய நகரங்களில் விமானப்படையின் வான்வழி ரோந்துப் பாதுகாப்பு

இந்த நகரங்களின் வான் பாதுகாப்பை இந்திய விமானப்படை தனது வசம் எடுத்துக் கொள்ளும். தீவிரவாதிகள் வான்வழியாக ஊடுறுவ முயன்றால் அவற்றை தடுத்து அழிக்கும் நடவடிக்கையில் விமானப்படை உடனடியாக செயல்பட இது வழிவகுக்கும்.
இத்திட்டத்தில் தற்போது டெல்லி, மும்பை, பெங்களூர், புநே ஆகிய நகரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த நகரங்களில் 3 முதல் 4 போர் விமானங்கள் நிறுத்தி வைக்கப்படும். விமானக் கடத்தல் உள்ளிட்டவை நடைபெறும் போது இவை பாதுகாப்பு மற்றும் தடுப்பு முயற்சிகளுக்கு பயன்படுத்தப்படும்.
டெல்லியில் காமன்வெல்த் போட்டி நடைபெற்ற போதும், குடியரசு தின அணிவகுப்பின்போதும் அளிக்கப்படும் அதே அளவிலான பாதுகாப்பை இந்த சிறிய ரக விமானப்படைப் பிரிவு சம்பந்தப்பட்ட நகரங்களுக்கு அளிக்கும்.
இந்த படைப் பிரிவில் சுகோய் 30, மிக் 21, மிக் 29 ஆகியவை இடம்பெறும் என்று தெரிகிறது.
மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு வான்வழிப் பாதுகாப்பை அளிக்க விமானப்படை திட்டமிட்டது. தற்போது அது அமலுக்கு வரவுள்ளது.












Click it and Unblock the Notifications