தங்கம்: கிராம் விலை ரூ 2000ஐ நெருங்கிறது!
சென்னை: இதோ குறையும் அதோ குறையும் என்று நகை வர்த்தகர்களால் கூறப்பட்டு வந்த தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்தவண்ணம் உள்ளது.
தீபாவளி பண்டிகையின்போது, ஒரு பவுன் ரூ. 15 ஆயிரத்தைத் தொட்டது தங்கம் விலை. அதன் பிறகு விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு மாறாக விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது.
ஆபரணத் தங்கம் விலை சவரன் ரூ. 15 ஆயிரத்தை தாண்டியது.
இந்த நிலையில் இன்று ஒரே நாளில் அதிரடியாக பவுனுக்கு ரூ. 128 அதிகரித்துள்ளது. நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ. 15 ஆயிரத்து 128 ஆக இருந்தது.
இன்று பவுனுக்கு ரூ. 128 உயர்ந்து ரூ. 15 ஆயிரத்து 256-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் ரூ. 1907 ஆக உள்ளது. விரைவில் கிராம் ரூ 2000-த் தொடும் சூழல் உள்ளது. இந்த அசாதாரண விலை உயர்வு மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
உலக அளவில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. மேலும் பங்கு சந்தையை விட தங்கத்தில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications