நெல்லை மாவட்டத்தில் தொடர் மழை: பிசான பருவ நெல் சாகுபடி தீவிரம்
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் மழையால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் பிசான பருவ நெல் சாகுபடி பணிகளை விவசாயிகள் துவங்கியுள்ளனர்.
நெல்லை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் தற்போது பலத்த மழை பெய்யத் துவங்கியுள்ளது. நேற்று முன்தினம் இரவு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் விடிய விடிய மழை பெய்தது.
நெல்லை மாவட்டத்தில் நேற்றைய நிலவரப்படி அம்பாசமுத்திரத்தில் 45 மிமீ, ஆய்குடியில் 40.6 மிமீ, சேரன்மகாதேவியில் 4, பாளையங்கோட்டையில் 33.4, ராதாபுரத்தில் 6, சங்கரன்கோவிலில் 35, செங்கோட்டையில் 42, சிவகிரியில் 31, தென்காசியில் 41.4, நெல்லையில் 32, ஆலங்குளத்தில் 57.2 மிமீ மழை பதிவாகியுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியிலும் நல்ல மழை பெய்து வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் மழையை எதிர்பார்த்து 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நாற்றங்கால் அமைத்திருந்தனர். தற்போது மழை பெய்துள்ளதை அடுத்து விவசாயிகள் நாற்றங்காலில் இருந்த நெல்நாற்றுகளை விவசாய நிலங்களில் நடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications