For Daily Alerts
Just In
2வது முறையாக அதிபராக பொறுப்பேற்றுள்ள ராஜபக்சேவுக்கு மன்மோகன் சிங் வாழ்த்து
டெல்லி: 2வது முறையாக அதிபர் பொறுப்பை ஏற்றுள்ளதற்காக ராஜபக்சேவுக்கு பிரதமர் மன்மோகன் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ராஜபக்சேவுக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில்,
அதிபர் ராஜபக்சேவின் இரண்டாவது பதவிக்காலம், இலங்கை மக்களுக்கான முன்னேற்றத்துக்கும் அமைதிக்கும் நல்லிணக்கத்துக்கும் முக்கியமான காலமாக அமையும்.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்த எதிர்பார்க்கிறேன். இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து உதவி வழங்கும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
Comments
Story first published: Wednesday, November 24, 2010, 17:29 [IST]