வர்த்தகம் தொடங்கியதுமே 122 புள்ளிகள் உயர்ந்தது சென்செக்ஸ்
Subscribe to Oneindia Tamil
மும்பை: மும்பை பங்குச் சந்தையில் இன்றுகாலை வர்த்தகம் தொடங்கியதுமே 122 புள்ளிகள் உயர்ந்தது சென்செக்ஸ்.
கடந்த 2 நாட்களாக சரிவைக் கண்டு வந்தது சென்செக்ஸ். இந்தநிலையில் இன்றுகாலை வர்த்தகம் தொடங்கியதுமே உயர்வைக் கண்டது. காலையில் வர்த்தகம் தொடங்கியதும் 122 புள்ளிகள் உயர்ந்து, 19,581.95 ஆக இருந்தது சென்செக்ஸ்.
அதேபோல தேசிய பங்குச் சந்தையான நிப்டியும், 30.70 புள்ளிகள் உயர்ந்து, 5896.45 ஆக இருந்தது.
உலக சந்தைகளில் காணப்படும் ஸ்திரத்தன்மையே இந்த உயர்வுக்கக் காரணம் என பங்குச் சந்தை வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
ஆசிய சந்தைகளைப் பொறுத்தவரை ஹாங்காங்கின் செங் இன்ட்க்ஸ் உயர்வைக் கண்டது. அதேபோல ஜப்பானின் நிக்கியும் நல்ல உயர்வைக் கண்டது. அமரிக்காவின் டோ ஜோன்ஸ் தொழில் இன்டக்ஸும் 1.37 சதவீத உயர்வைக் கண்டது.












Click it and Unblock the Notifications