அணு ஆயுதங்களை ஏந்திச் சென்று தாக்கும் அக்னி-1 ஏவுகணை பரிசோதனை
பாலசோர்: அணு ஆயுதங்களை ஏந்திச் சென்று தாக்கக் கூடிய வல்லமை படைத்த அக்னி-1 ஏவகணை இன்று ஏவி பரிசோதிக்கப்பட்டது.
அது அக்னி-1 ஏவுகணையின் மேம்படுத்தப்பட்ட வடிவமாகும். தரையிலிருந்து தரையில் உள்ள இலக்கைத் தாக்கி அழிக்கக் கூடியது இந்த ஏவுகணை.
மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம், மேம்படுத்தப்பட்ட துல்லியம் உள்ளிட்டவை இந்த புதிய வடிவத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. ஒரிசா மாநிலத்தின் வீலர் தீவில் உள்ள நடமாடும் ஏவுதளத்திலிருந்து இந்த ஏவுகணை இன்று காலை ஏவப்பட்டது.
இதன் முடிவு உடனடியாக தெரியவில்லை. ஏவுகணை பரிசோதனையின் முடிவுகளை விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அதன் பின்னரே இது வெற்றியா, இல்லையா என்பது தெரிய வரும்.
700 முதல் 900 கிலோமீட்டர் தூரம் வரை உள்ள இலக்கை குறி பார்த்து தாக்கக் கூடியது அக்னி-1 ஏவுகணை. 15 மீட்டர் உயரமும், ஒரு மீட்டர் அகலமும் கொண்டதாகும். திரவ மற்றும் திட எரிபொருள் மூல் இயங்கக் கூடியது. விநாடிக்கு 2.5 கிலோமீட்டர் வேகத்தி்ல பயணிக்கக் கூடியது.
2002ம் ஆண்டு ஜனவரி 25ம் தேதி முதல் தடவையாக அக்னி-1 பரிசோதிக்கப்பட்டது. 2 மற்றும் 3வது சோதனைகள் முறையே 2003, ஜனவரி 9ம் தேதியும், 2004 ஜூலை 4ம் தேதியும் நடந்தன. இன்று நடந்திருப்பது 8வது சோதனையாகும்.












Click it and Unblock the Notifications