காந்திய கொள்கைகளை மீறி மியான்மருடன் இந்தியா உறவு: ஆங் சான் சூகி குற்றச்சாட்டு
மியான்மரின் எதிர்கட்சித் தலைவி ஆங் சான் சூகி ராணுவ அரசால் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வீட்டுச் சிறை மற்றும் சிறையில் வைக்கப்பட்டிருந்தார். அன்மையில் தான் விடுதலை பெற்றார்.
தற்போது சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் அவர் நிருபர்களிடம் கூறியதாவது,
இந்தியா மியான்மர் ராணுவ அரசுடன் உறவு கொண்டாடுகிறது. குறிப்பாக வர்த்தக உறவில் இரு நாடுகளும் அதிக நெருக்கமாக உள்ளன. இது எனக்கு கவலை அளிப்பதாக இருக்கிறது. இதன் மூலம் இந்தியா காந்தி, நேருவின் கொள்கைகளை மீறிவிட்டதாகவே எண்ணுகிறேன். இந்த நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும்.
மியான்மரில் ஜனநாயகம் மலர இந்தியா எங்களுக்கு உதவ வேண்டும். அதற்கு இதுவே நல்ல தருணம். இந்தியாவுடன் இணைந்து செயல்படக் காத்திருக்கிறேன் என்று அவர் கூறினார்.
சூகி ஹீமாச்சல பிரசே மாநிலத்தில் உள்ள இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் அட்வான்ஸ்ட் ஸ்டடீஸில் இரண்டு வருடம் கல்வி பயின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
மியான்மர் விவகாரத்தில் இந்தியா மெளனமாக இருப்பதாக சமீபத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமாவும் பகிரங்கமாகவே குற்றம் சாட்டியிருந்தார், அதுவும் இந்திய நாடாளுமன்றத்திலேயே அதுகுறித்து அவர் கூறினார் என்பது நினைவிருக்கலாம்.