குடியரசு நூலை வெளியிட தடை கோரிய கி.வீரமணியின் மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி
டெல்லி: பெரியாரின் குடியரசு நூலில் இடம் பெற்ற கட்டுரைகளை நூலாக வெளியிட பெரியார் திராவிடர் கழகத்திற்கு அளிக்கப்பட்ட அனுமதிக்கு தடை விதிக்கக் கோரி தி.க. தலைவர் கி.வீரமணி தாக்கல் செய்திருந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
குடியரசு இதழில் தந்தை பெரியார் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து நூலாக வெளியிட பெரியார் திராவிடர் கழகம் முடிவு செய்தது. இதை எதிர்த்து வீரமணி சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகினார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வீரமணியின் கோரிக்கையை நிராகரித்தது. நூலை வெளியிட அனுமதி அளித்தது. அதைத் தொடர்ந்து சமீபத்தில் அந்த நூல் வெளியிடப்பட்டது.
இந்த நூல் வெளியிடப்பட்ட சில நாட்களிலேயே நூலாசிரியர் திருவாரூர் தங்கராசுவின் வீடு தாக்கப்பட்டது.
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற அனுமதிக்குத் தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தை அணுகினார் வீரமணி. இன்று அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, தீபக் வர்மா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், வீரமணியின் கோரிக்கையை நிராகரித்து விட்டது. நூல்கள் விற்பனைக்கும் தடை விதிக்க அது மறுத்து விட்டது.












Click it and Unblock the Notifications