நீரா ராடியா டேப் வெளியான விவகாரம்-விசாரணைக்கு அரசு உத்தரவு
Subscribe to Oneindia Tamil

இந்த விவகாரம் குறித்து ஐபி (மத்திய உளவுப் பிரிவு)யும், மத்திய நேரடி வரிவிதிப்பு ஆணையமும் விசாரணை நடத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ராடியா பல்வேறு தலைவர்கள், வர்த்தக அதிபர்களுடன் பேசியதன் தொலைபேசி பேச்சுக்களை வருமான வரித்துறை தனது விசாரணைக்காக ஒட்டுக் கேட்டு பதிவு செய்தது. ஆனால் இதில் கிட்டத்தட்ட 100 பேச்சுக்கள் அடங்கிய ஆடியோ டேப்கள் பத்திரிகைகளுக்கு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இதை எதிர்த்து ரத்தன் டாடா இன்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த நிலையில் தற்போது விசாரணைக்கு மத்திய அரசு அவசரம் அவசரமாக உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications