சில்வாசாவில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 221-வது கிளை துவக்கம்
தூத்துக்குடி: தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தனது 221-வது கிளையை தாத்ராநகர் ஹவேலி யூனியன் பிரதேசத்தில் உள்ள சில்வாசாவில் திறந்துள்ளது.
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 221-வது கிளை தாத்ராநகர் ஹவேலி யூனியன் பிரசேதம் சில்வாசாவில் திறக்கப்பட்டது. விழாவிற்கு வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி ஜெகநாதன் தலைமை வகித்தார்.
வங்கி டைரக்டர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார். புதிய கிளையை பிகேலான் சிந்தடிக் பிரைவேட் லிமிடேட் இயக்குனர் மகேஷ்பாய் லக்கானி திறந்து வைத்தார். 162-வது ஏடிஎம் மையத்தை கோபிகர் திறந்து வைத்தார்.
விழாவில் தலைமை நிர்வாக அதிகாரி ஜெகநாதன் பேசுகையில்,
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி கடந்த 89 ஆண்டுகளாக லாபம் ஈட்டி தன்னிரகற்ற சாதனை படைத்து வருகிறது. 90-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள வங்கியின் மொத்த வாணிபம் ரூ.21054 கோடியை எட்டியுள்ளது. நடப்பு ஆண்டில் 30-9-2010 வரையில் ரூ.1260 கோடி நிகர சொத்து மதிப்பை அடைந்துள்ளது. வங்கியின் மூலதன தன்னிறைவு விகிதம் 15.11 சதவிகிதமாக உள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications