நில ஆக்கிரமிப்பில் மதசார்பற்ற ஜனதா தளத் தலைவர்கள்: எதியூரப்பா சொல்கிறார்

அந்த நிலங்களை கைப்பற்றி ஏழை, எளிய மக்களுக்கு கொடுப்பது பற்றி தான் தீவிரமாக சிந்தித்து வருவதாகவும் அவர் சீரியஸாக கூறியுள்ளார்.
இதுகுறித்து எதியூரப்பா கூறுகையில்,
மைசூர் மாவட்டத்தில் நடந்திருக்கும் நில ஆக்கிரமிப்பு குறித்து இந்தியாவில் உள்ள அனைத்து செய்தித் தாள்களிலும் விளம்பரம் செய்ய எங்கள் கட்சி முடிவு செய்துள்ளது.
ஹாசன் விவகாரம் (அங்கு நடந்த நில மோசடி) பற்றி இன்னும் 3 அல்லது 4 நாட்களில் விளம்பரம் செய்யவிருக்கிறோம். நான் ஹாசனிற்கு நேரில் செல்லவிருக்கிறேன். அந்த நிலங்களை எல்லாம் பறிமுதல் செய்து அங்குள்ள எஸ்.சி., எஸ்.டி. மக்களுக்கு பிரித்துக் கொடுத்துவிடலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன் என்றார்.
ஹெச்.டி. தேவே கவுடா, ஹெச்.டி. குமாரசாமி ஆகியோர் கர்நாடக முதல்வராக இருந்த காலத்தில் நடந்த நில ஆக்கிரமிப்பு குறித்து பாஜக செய்தித்தாள்களில் விளம்பரம் செய்தது பற்றி கேட்டபோது எதியூரப்பா இவ்வாறு தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications