மதுரைப் பகுதி நக்சல் தலைவர் உடுப்பியில் கைது
உடுப்பி: போலீசாரால் தேடப்பட்டு வந்த தமிழக நக்சலைட் தலைவர் கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
போலீசாரல் தேடப்பட்டு வந்த நக்சலைட்டான சேகர் என்ற ரஞ்சித் என்ற ரவி என்ற பிரேம் புதன்கிழமை நக்சலைட் ஒழிப்புப் படையினரால் கைது செய்யப்பட்டார்.
குந்தாபூர் தாலுகா யெட்மோகா கிராமத்தில் பசவன்பலு வனப்பகுதியில் அவர் பிடிபட்டார்.
இவர் தடைசெய்யப்பட்ட சிபிஐ மாவோயிஸ்ட் இயக்கத்தின் மதுரைப் பகுதி தலைவர் ஆவார். 2 வழக்குகளில் தொடர்புடைய அவரை தமிழக போலீசார் தேடி வந்தனர். அவரது தலைக்கு ரூ. 1 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், இதுவரை போலீசார் கையில் சிக்காமல் தப்பித்துக் கொண்டிருந்தார். தற்போது கர்நாடகாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்து 5 ஜெலடின் குச்சிகள், 10 டெட்னேடர்கள், மாவோயி்சம் தொடர்பான சில புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சேகர் குந்தபூரில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். விரைவில் தமிழக போலீசாரிடம் அவர் ஒப்படைக்கப்படுவார் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications