சிபிஐ இணையதளத்தை 'ஹேக்' செய்த பாக் சைபர் ஆர்மி!

இதை தாங்கள் தான் செய்ததாக பாகிஸ்தான் சைபர் ஆர்மி என்ற அமைப்பு கூறியுள்ளது.
சிபிஐயின் முதல் பக்கத்தில், அந்த அமைப்பு வெளியிட்டுள்ள செய்தியி்ல், ''இந்திய சைபர் ஆர்மி எங்கள் இணையத்தளங்களை ஹேக் செய்யக் கூடாது என்று எச்சரிக்கிறோம், பாகிஸ்தான் ஜிந்தாபாத்'' என்று கூறப்பட்டிருந்தது.
சிபிஐ இணயதளம் தவிர மேலும் 270 இணையத்தளங்களையும் தாங்கள் ஹேக் செய்துள்ளதாக அது தெரிவித்துள்ளது.
உலக அரங்கில் இந்தியா தகவல் தொழில்நுட்பத்தில் மிகச் சிறந்து விளங்குகிறது. ஆனால் அத்தகைய இந்தியாவின் புலனாய்வுத் துறை இணையத்தளமே ஹேக் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் எத்தனையோ தகவல் தொழில்நுட்ப நிபுணர்கள் இருந்தும், அவர்களை மத்திய அரசு சரியாக பயன்படுத்திக் கொள்வதில்லை என்பதையே இது எடுத்துக் காட்டுகிறது.
இந்த சிபிஐ இணையத்தளத்தில் இன்டர்போல் தொடர்பான ஏராளமான சர்வதேச விவரங்கள் அடங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அதில் வைரஸ்களையும் பரப்பிவிட்டுள்ளதால், சிபிஐ இணையத்தளம் இன்று காலை வரை இயஙகவில்லை.












Click it and Unblock the Notifications