செல்போனில் நிர்வாண படம்-மனமுடைந்த இளம்பெண் தீக்குளித்து பலி
திருவனந்தபுரம்: செல்போனில் தனது நிர்வாண படங்களை காதலன் வெளியிட்டதால் மனமுடைந்த இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
கேரளாவில் திருச்சூர் மாவட்டம் செருதுருத்தி தேசமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இவர் அந்த பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஷினு என்ற பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறியது.
திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஷினுவுடன் பிரவீன் உல்லாசம் அனுபவித்துள்ளார். அப்போது நிர்வாண நிலையில் ஷினுவை தனது செல்போனில் அவர் படம் எடுத்துள்ளார். இந்த காட்சிகளை அவர் தனது நண்பர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இதை அறிந்த ஷினு தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி பிரவீனை வற்புறுத்தியிருக்கிறார். ஆனால் அவர் மறுத்துவிட்டார்.
இதனால் மனமுடைந்த ஷினு நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் பிரவீனை கைது செய்தனர். அவருடைய நண்பர் நவ்ஷாத்தை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications