நான் வாயைத் திறந்தால் முலாயம் சிறையில் இருப்பார்: அமர் சிங் பேட்டி
டெல்லி: நான் சமாஜ்வாடிக் கட்சியில் கடந்த 14 ஆண்டுகளாக இருந்திருக்கிறேன். நான் வாயைத் திறந்தால் முலாயம் சிங் யாதவ் சிறையில் தான் இருப்பார் என்று கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அமர் சிங் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், நான் வாயைத் திறந்தால் நிறைய பேருக்கு சிக்கல் உண்டாகும். குறிப்பாக முலாயம் சிங் யாதவ் சிறைக்குச் செல்லும் நிலை உருவாகும்.
நான் கடந்த 14 வருடங்களாக சமாஜ்வாடிக் கட்சியில் இருந்திருக்கிறேன் என்றார்.
லோக் மன்ச் கட்சித் தலைவர் அமர் சிங் பூர்வான்சலை உத்தர பிரதேசத்தில் இருந்து பிரித்து தனி மாநிலமாக்க ஆதரவு திரட்டும் வகையில் பாத யாத்திரை மேற்கொண்டுள்ளார்.
கட்சி விரோத செயல்களுக்காக கடந்த ஆண்டு சமாஜ்வாடிக் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஆஸம் கான் நேற்று முன் தினம் மீண்டும் அதே கட்சியில் சேர்ந்தார். அமர் சிங்கை கான் ஏஜென்ட் என்றும், சப்ளையர் என்றும் விமர்சித்திருந்தார்.












Click it and Unblock the Notifications