மோடியைக் கொல்ல திட்டமிட்ட லஷ்கர்-தமிழகம், கேரளாவில் முகாம் அமைக்கவும் திட்டம்-விக்கிலீக்ஸ்

இதுதொடர்பான அமெரிக்க தூதரக தகவல்கள் அடங்கிய கடிதப் போக்குவரத்தை அது வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக 2009ம் ஆண்டு ஜூன் மாதம் 19ம் தேதி அமெரிக்க வெளியறவு அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் கையெழுத்திட்ட தந்தி தகவல் ஒன்றை அது வெளியிட்டுள்ளது.
பிற நாடுகளுக்கு இந்தத் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளக் கூடாது என்ற தலைப்பிட்டு இக்கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அதில், லஷ்கர் இ தொய்பா அமைப்பு பாகிஸ்தான், இந்தியா மட்டுமல்லாமல், இலங்கை, நேபாளத்திலும் தனது கிளைகளை வலுப்படுத்த லஷ்கர் இ தொய்பா திட்டமிட்டு வருகிறது.
இந்தியாவில் தனது செயல்பாடுகளைப் பலப்படுத்தும் முயற்சிகளை ஷபீக் காஃபா என்ற முக்கிய லஷ்கர் நிர்வாகி ஈடுபட்டு வருகிறார். இந்தியாவைச் சேர்ந்த லஷ்கர் இ தொய்பா முக்கியஸ்தரான ஹூசேன் என்பவரும் இதற்கு பல்வேறு உதவிகளைச் செய்துவருகிறார். ஜூன் மாதத்தில் இந்த இருவரும் மூன்று முக்கிய திட்டங்களுடன் இந்தியாவில் தங்களது செயல்பாடுகளை விரைவுபடுத்தியுள்ளனர்.
அந்த மூன்று முக்கிய திட்டங்கள் - குஜராத் முதல்வர் நரேந்திர மோடியைத் தீர்த்துக் கட்டுவது, இந்தியாவில் பலம் வாய்ந்த பயிற்சி முகாமை தொடங்குவது, ஒரு காரைப் பயன்படுத்தி மிக முக்கியத் திட்டம் ஒன்றை நிறைவேற்றுவது (கார் குண்டுவெடிப்புத் திட்டமாக இருக்கக் கூடும் என சந்தேகிக்கப்படுகிறது).
இந்தியாவைச் சேர்ந்த சமீர் என்ற நபருடன் இணைந்து இந்தத் திட்டங்களை செயல்படுத்த ஹூசேன், லஷ்கர் அமைப்புக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தியாவின் தமிழகம், கர்நாடகம், கேரளாவில் பலம் வாய்ந்த பயிற்சி முகாம்களை அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறித்தும் ஹூசேனுடன் காஃபா விவாதித்துள்ளார்.
தென்னிந்தியாவில் 2 முக்கிய குழுக்களை நியமிக்கும் திட்டத்தை செயல்படுத்தும் வேலைகளிலும் லஷ்கர் ஈடுபட்டிருப்பதாக உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், நேபாளத்தில் லஷ்கர் அமைப்பை பலம் வாய்ந்த அமைப்பாக மாற்றும் நடவடிக்கைகளையும் அந்த அமைப்பு முடுக்கி விட்டுள்ளது.
மே மாதவாக்கில் கிடைத்துள்ள சில முக்கியத் தகவல்கள் இந்தியாவில் பெரும் தாக்குதலுக்கு லஷ்கர் திட்டமிட்டிருப்பது தெரிய வருகிறது. குறிப்பாக தென்னிந்தியாவில் இதை நடத்த அவர்கள் திட்டமிட்டிருப்பதாக தெரிய வருகிறது. இருப்பினும் என்ன மாதிரியான தாக்குதல் என்பது தெரியவில்லை.
குறிப்பாக தமிழகம் அல்லது கேரளாவை மையமாகக் கொண்ட லஷ்கர் குழுவை அமைத்து அதன் மூலம் இத்தாக்குதல் நடத்தப்படலாம் என்று தெரிகிறது. இவர்களுக்கு உதவ இலங்கையில் ஒரு குழுவை அமைக்கும் நடவடிக்கையிலும் லஷ்கர் ஈடுபட்டதாக தெரிகிறது.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications