ராஜா வீட்டில் ரெய்ட்: திமுக ஆலோசனை-வழக்கமான சோதனை என்கிறது காங்.!
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ராசாவின் வீடுகளில் சிபிஐ சோதனை நடத்தி வரும் நிலையில் திமுக எம்பிக்கள் இன்று அக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலுவி்ன் டெல்லி வீட்டில் சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளனர்.
சிபிஐ நடத்தி வரும் இந்த ரெய்ட் திமுக தரப்பை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந் நிலையில் இந்த விவகாரத்தை எப்படி கையாளுவது என்பது குறித்து பாலுவி்ன் வீட்டில் ஆலோசனை நடக்கவுள்ளதாகத் தெரிகிறது.
இந் நிலையில் ராசா வீடுகளில் நடத்தப்பட்டு வரும் ரெய்ட் குறித்து விவாதிக்க சிபிஐ இயக்குநர் ஏ.பி.சிங் அவசரமாக மூத்த அதிகாரிகளின் கூட்டத்தை டெல்லியில் கூட்டினார்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர், 2ஜி விவகாரம் தொடர்பாக இந்த ரெய்ட்கள் நடந்தன. இதில் யாரும் கைது செய்யப்படவில்லை என்றார்.
இது வழக்கமான சோதனை தான் என்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications