நில ஊழல்-உபி மாஜி தலைமைச் செயலாளருக்கு 4 ஆண்டு சிறை

Subscribe to Oneindia Tamil

காஜியாபாத்: நில முறைகேடு ஊழல் வழக்கில் உபி முன்னாள் தலைமைச் செயலாளர் நீரா யாதவுக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ப்ளெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் எஞ்ஜினீயரிங் சிஇஓ அசோக் சதுர்வேதிக்கும் இந்த வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று இந்த தண்டனை அறிவிக்கப்பட்டது.

நொய்டா அத்தாரிட்டியின் தலைவராக நீரா யாதவ் இருந்தபோது, விதிகளை காற்றில் பறக்கவிட்டு நில ஒதுக்கீடு செய்தார். தன் பெயரில் ஒரு வீட்டு மனையும், தனது இரு மகள்கள் பெயர்களில் இரு மனைகளையும் விதிகளை மீறி ஒதுக்கியிருந்தார் நீரா. இன்னும் பல ஊழல்களிலும் இவர் சம்பந்தப்பட்டிருந்தார்.

இந்த முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்ததும், உச்ச நீதிமன்றத்தால் தலைமைச் செயலர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார் நீரா. இந்தியாவின் மிக மோசமான ஊழல்ஐஏஎஸ் அதிகாரி என இவரை தேர்வு செய்தது ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கம்.

பதவியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு பாஜகவில் கடந்த ஆண்டு கணவருடன் சேர்ந்துவிட்டார் நீரா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+