ஆந்திராவில் மாவோயிஸ்ட் நக்சலைட் போலீஸில் சரண்-3 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
கரீம்நகர்: ஆந்திர மாநிலம், கரீம் நகர் மாவட்டத்தில் 40 வயதான மாவோயிஸ்ட் நக்சலைட் ஒருவர் சரண் அடைந்தார். அவர் கொடுத்த தகவலின் பேரில் 3 மாவோயிஸ்ட்கள் கைது செய்யப்பட்டனர்.
இது குறி்தது எஸ் பி என். ஷிவ சங்கர் ரெட்டி கூறியதாவது,
கரீம்நகர் மாவட்டத்தில் உள்ள அல்லிபூர் கிரமாத்தைச் சேர்ந்தவர் பீமண்ணா (எ) பைரி ராமசந்திரன். மவோயி்ஸ்ட் உறுப்பினரான அவர் நேற்று போலீசாரிடம் சரண் அடைந்தார்.
அவர் கொடுத்த தகவலின் பேரில் கடா ராஜைய்யா (எ) ராஜண்ணா (35), கஞ்சா பக்கையா (35) மற்றும் பண்டாரி அஷோக் (34) ஆகியோரை கைது செய்தோம்.
பீமண்ணாவுக்கு 35 வழக்குகளில் தொடர்புள்ளது. கைதானவர்களிடம் இருந்து ரூ. 3. 75 லட்சம், 1 துப்பாக்கி, 2 நாட்டு துப்பாக்கிகள் மற்றும் 32 புல்லட்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்று அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications